Sunday 19th of May 2024 05:30:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
புதையல் அகழ்ந்த குற்றச்சாட்டில் பிக்குமார் உட்பட்ட 11 பேர் வவுனியாவில் சிக்கினர்!

புதையல் அகழ்ந்த குற்றச்சாட்டில் பிக்குமார் உட்பட்ட 11 பேர் வவுனியாவில் சிக்கினர்!


வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் அகழ்ந்த குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர்.

தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் அகழப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிசார் நிலத்தை அகழ்ந்துகொண்டிருந்த பிக்குமார் இருவர் உட்பட 11 பேரை கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து நிலத்தை அகழ்வதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE